Protected by Copyscape Website Copyright Protection

Monday, September 19, 2011

ஐயப்பன் பஞ்சகம்


Had an opportunity to read this wonderful work on "my beloved" written by His devotee - Shri.Su.Ravi 


"Avan Arulaale Aavn thaal vanangi..." 
Its only by His grace one can write these lines..


Swamy Sharanam
V.Aravind Subramanyam
------------------------



சீலமுயர் வாழ்வையொரு யோகமென வேபயிலும்சாதகர்தமைக்
காலனொரு போதுமணு காதபடி நாளுமவன்காத்தருளுவான்!
நீலமுகி லாடுமலை சோலைபல சூழுமலைநீலிமலையாம்
வாலியணு காதமலை வாழுமிறை பாதமலர்வாழ்த்துமனமே!

யானெனதி லாதநிலை யோடுபல காடுமலைஏறிவருவார்
தான் அவர்தம் காவலென வீடுமனை வாசலவன்காத்தருளுவான்!
யானைக ளுலாவுமலைவானரமி லாதமலைஆளுமரசன்
தேனமர் துழாய்புரளும் தோளழகன் பாதமலர்தேடுமனமே!

எண்ணியவெ லாமருளும் ஏழைகளின் தோழன் சிவபாலனிவனை
நண்ணுமடி யார்களொரு போதும் நலியாதப்டிக்காத்தருளுவான்!
திண்ணிய மரங்களுயர் கானகம்  அடர்ந்தமலைகாந்தமலைமேல்
விண்ணிலெழு ஜோதிமல ரானபர தேவனைவிரும்புமனமே!


பூரணை மணாளனவன்புஷ்கலையின் காதலனைப்போற்றுமடியார்
தாரணியில் பேறு,புக ழோடு பல காலமுறக்காத்தருளுவான்!
நாரணியும்ஆறணியும் நாயகனும் கூட உரு வாகிமலைமேல்
பூரண நிலாவென உலாவுமவன் பொன்னடிகள்போற்றுமனமே!


மேதினியில் ஏதிலிகள் தோழனவன் மாமலையைத்தேடிவருவோர்
சோதனை உறாதபடிசோர்வுதழு வாதபடிக்காத்தருளுவான்ன்!
வேதஒலி சூழுமலைவேடுவரில் யோகியவள்வாழுமலைமேல்
நாதவடி வானவனைபூதகண நாயகனை நண்ணுமனமே !

No comments:

Post a Comment