Protected by Copyscape Website Copyright Protection

Friday, April 5, 2013

"ஸ்ரீ ஐயப்ப மாலை"

தமிழ் முனியாம் அகத்தியரால் அருளப்பட்ட ஐயப்ப மாலை.

சபரிமலை பிரதிஷ்டைக்கு வழிகாட்டியவரும், பந்தள வேந்தனுக்கு குருவாக இருந்து ஐயப்ப தத்துவத்தை உணர்த்தியவரும், விரதமுறைகளை வகுத்து கொடுத்தவரும், ஐயனை முதன்முதலில் பூஜித்தவரும் அகத்தியரே ஆவார். சாஸ்தாவின் மூலாதார க்ஷேத்ரமான சொரிமுத்தைய்யன் கோவிலில் தான் அகத்தியருக்கு சாஸ்தாவின் பூர்ண தரிசனம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்யாங்க்காவு, அச்சன் கோவில் என ஆறு ஆதார சக்ரங்க்களுக்கான கோவில்களிலும் வழிபட்டவர் அகத்தியர். ஆக்ஞா சக்ரமான சபரிமலையில் ஐயனை போற்றி அவர் எழுதியதே இந்த தமிழ் துதி

அய்யன் ஐயப்பன் ஆனந்த சித்தனாக விளங்குவதால், சித்தர்களுக்கேல்லாம் தலைவரான அகத்தியர் ஐயனை இப்படி துதித்தார் போலும்.

இந்த ஐயப்ப மாலை ஸ்ரீ நொச்சூர் ஸ்வாமிகள் மூலமாக அகத்தியர் இவ்வுலகுக்கு அளித்த சொத்து. இது பக்தர்தம் துன்பங்களையும் துயரங்களையும் போக்கி நல்வாழ்வு அருளக்கூடியது.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
- V.அரவிந்த் ஸுப்ரமண்யம்

"ஸ்ரீ ஐயப்ப மாலை" 

வையமும் வானும் வாழ மறைமுதல் தருமம் வாழ
செய்யும் நற்செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவு அகன்று இனிது வாழ
ஐயனாய் அப்பனானான் அவர்பதம் வணக்கம் செய்வோம்.

மெய்யெல்லாம் திருநீறாக விழியெலாம் அருள் நீராகப்
பொய்யிலா மனத்தராகிப் புலன் எலாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுன் விளக்கமுற்றன் பால் விம்மி
ஐயனே அப்பா என்பார் அவர் பதம் வணக்கம் செய்வோஒம்.

சக்தியெலாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்தியெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெல்லாம் சபரிமலை சித்பரமாம் சபரிமலை
புத்தியெல்லாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே!

ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ர மலை ரிஷிகணங்கள் ஏத்தும் மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளம்சேர் மலை வளமே!

ஹரிஹர புத்ரா போற்றி அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி என்னையாள் சத்குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி ஐயனே போற்றி! போற்றி!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

No comments:

Post a Comment